ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஆற்றிய உரையின் போது தெரிவித்தார்.
இலங்கையர்களுக்கு ஆகக்கூடுதலான நிவாரணம் வழங்கும் சந்தர்ப்பமாக இது அமையும். எமது இனத்துக்கு கௌரவமாக சேவையளிப்பதே எங்கள் பொறுப்பாகும். நல்ல எதிர்காலத்துக்காக மாற்றங்களை ஏற்படுத்துவோம். வென்றெடுத்த சுதந்திரத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கமாகும்.
ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்கும் வரை மக்கள் பொறுத்திருக்க வேண்டும். மக்கள் சேவையை மக்கள் சேவையாகவே கொண்டு நடத்துவதற்கு நாம் முன்னிற்போம். சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை.
ஜனாதிபதி பதவியேற்புக்கு 6,000 ரூபாய் மட்டுமே செலவு.
அமைச்சரவையை 71 இலிருந்து 31ஆகக் குறைத்தோம்.
கடந்த வரவு – செலவும் திட்டத்தில் 1,400 பில்லியன் ரூபாய், வரி வருமானமாக எதிர்ப்பார்க்கப்பட்டது.
கடந்த வரவு – செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை 521 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த தேசிய உற்பத்தியின் 4.6 சதவீதமாகும்.
ஹெஜின் ஒப்பந்தமே நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது.
ஜனாதிபதியின் செலவு விவரங்கள்
2008ஆம் ஆண்டு-634கோடி ரூபாய்
2009ஆம் ஆண்டு- 765 கோடி ரூபாய்
2010ஆம் ஆண்டு- 5063 கோடி ரூபாய்
2011ஆம் ஆண்டு- 5,063 கோடி ரூபாய்
2012ஆம் ஆண்டு- 5,936 கோடி ரூபாய்
2013ஆம் ஆண்டு- 6,244 கோடி ரூபாய்
2014ஆம் ஆண்டு- 10,497 கோடி ரூபாய்
2015ஆம் ஆண்டு- 9,593 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டிருந்தது.
தற்போதைய ஜனாதிபதியின் செலவு 290 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே முன்னெடுப்போம்.
இடைக்கால வரவு செலவுத்திட்டம் ஒரே பார்வையில்.
* அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு
* ஓய்வூதியக் கொடுப்பனவு 1000 ரூபாவால் அதிகரிப்பு
* சமுர்த்திக் கொடுப்பனவு 100 முதல் 200 வீதம் அதிகரிப்பு
* உரமானியம் தொடர்ந்தும் வழங்கப்படும்
* சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு 10 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு
* மண்ணெண்ணெய் விலை லீட்டருக்கு 6 ரூபாவால் குறைப்பு
* சமயல் எரிவாயு 300 ரூபாவால் குறைப்பு
* சீனி கிலோ ஒன்று 10 ரூபாவால் குறைப்பு
* 400 கிராம் பால்மா பக்கற் 61 ரூபாவால் குறைப்பு
* ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 12.50 ரூபாவால் குறைப்பு
* பாண் ஒரு இறாத்தல் 6 ரூபாவால் குறைப்பு
* சஸ்டஜின் பால்மா 100 ரூபாவால் குறைப்பு
* ரின்மீன் 60 ரூபாவால் குறைப்பு
* அரச வங்கிகளில் 2 இலட்சம்வரை நகை அடகுவைத்து அதனை மீட்கமுடியாதவர்களின் வட்டிவீதம் தள்ளுபடி
* சீமெந்து ஒரு மூடை 90 ரூபாவால் குறைப்பு
* மாசி கிலோ ஒன்று 200 ரூபாவால் குறைப்பு
* சிரேஷ்ட பிரஜைகளுக்கான பஸ் கட்டணம் 50 வீதம் குறைப்பு
* ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஒன்றாக இணைப்பு
* 1000 சீசீக்கு குறைந்த கொள்ளளவு கொண்ட வாகனங்களுக்கான வரி 15 வீதத்தால் குறைப்பு
* மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதம் கல்விக்கு ஒதுக்கு
* அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவு 24 மணி நேரமும் திறக்கப்படும்
* செல்போன்களுக்கான ரீலோட் வரி 25 வீதத்தால் குறைப்பு
* நாட்டிலுள்ள சகலருக்கும் வங்கிக் கணக்குகள்
* என்.ஆர்.எப்.சி கணக்கிற்கு 5 வீத வட்டி அதிகரிப்பு
* வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கான கட்டணம் 5000 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாகக் குறைப்பு
* 5000 ரூபாவாகவிருந்த திருமணப்பதிவுக் கட்டணம் 1000 ரூபாவாகக் குறைப்பு
* ஜனாதிபதி பதவியேற்புக்கு 6000 ரூபாய் மட்டுமே செலவு
* அமைச்சரவையை 71 இலிருந்து 31 ஆகக் குறைத்தோம்
* கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் 1,400 பில்லியன் ரூபாய் வரி வருமானமாக எதிர்பார்க்கப்பட்டது
* கடந்த வரவுசெலவுத்திட்டத்தின் பற்றாக்குறை 521 பில்லியன் ரூபாயாகும். மொத்த தேசிய உற்பத்தியில் 4.6 சதவீதமாகும்
* ஹெஜின் ஒப்பந்தமே நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தது
* ஜனாதிபதியின் செலவு 290 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது
* கடந்த அரசாங்கத்தினால் அரசுக்கு 5000 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம்
* இளைஞர் பாராளுமன்றத்திற்கு நிதியளிக்கப்படும்
* 2013/2014 வரி வருடத்தில் 2000 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட இலாபத்தை சம்பாதித்த கம்பனிகள் அல்லது
* தனிநபர்கள் இலாபத்தில் 25 சதவீதத்தினை செலுத்த வேண்டும்
* உழைக்கும் பொழுது செலுத்தும் வரியிலிருந்து ஊழிய வருமானத்தின் முதல் 600,000 ரூபா விலக்களிக்கப்பட்டுள்ளது
* உரிமம் அளிக்கப்பட்ட கையடக்கத்தொலைபேசி இயக்குனர்கள் அனைவரிடமிருந்தும் 250 மில்லியன் ரூபா ஒரே தடவையில் அறிவிடப்படும்
* கடனட்டையினூடான கடன்களுக்கான வட்டியை 8 வீதமாக வரையறுக்க முன்மொழியப்பட்டுள்ளது































