வார இறுதிக்குள் ஊவா மாகாண சபையில் எங்களுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துவிடும்-ஹரீன்

வா மாகாண சபையில் இவ்­வார இறு­திக்குள் எங்­க­ளுக்கு பெரும்­பான்மை பலம் கிடைத்­து­விடும். இந்­நி­லையில் வார இறு­தியில் சத்­தியக் கட­தா­சி­களை ஒன்­றி­ணைத்து ஆளு­ந­ரிடம் ஆட்­சி­ய­மைக்க அனு­மதி கோருவோம். அவர் அனு­மதி வழங்­கா­விடின் மேல் நீதி­மன்­றத்தில் மனு தாக்கல் செய்து ஊவா மாகாண சபை அமர்வை நடத்தி ஆட்­சியை கைப்­பற்­றுவோம் என்று சபையின் எதிர்க்­கட்சித் தலைவர் ஹரீன் பெர்­னாண்டோ தெரி­வித்தார்.

மேலும் உலக சந்­தையில் மசகு எண்ணெய் 50 வீதத்­தினால் குறை­வ­டைந்­துள்­ள­மையின் கார­ண­மாக நாட்டில் எரி­பொருள் விலையை உட­ன­டி­யாக குறைக்­க­வேண்டும். மின்­சாரக் கட்­ட­ணத்­தையும் இறக்­கு­மதி செய்­யப்­படும் பால் மா வகை­களின் விலை­யையும் குறைக்க அர­சாங்கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்ட ஹரீன் பெர்­னாண்டோ மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறு­கையில்

ஊவா மாகாண சபையில் சில தினங்­களில் பாரிய மாற்றம் ஏற்­படும். நாங்கள் விரைவில் ஊவா மாகாண சபையில் ஆட்­சியைக் கைப்­பற்­றுவோம். ஊவா மாகாண சபையில் ஆளும் கட்­சிக்கு 18 பேர் உள்­ளனர். எமது பக்கம் இன்னும் மூன்று பேர் வந்தால் நாங்கள் ஆட்­சியை கைப்­பற்­றுவோம். எமது கொள்கை மற்றும் வேலைத்­திட்­டங்­களை பார்த்து மாகாண உறுப்­பி­னர்கள் எமது பக்கம் வரு­கின்­றனர். அர­சாங்கம் நிதியை பயன்­ப­டுத்தி அவர்­களை தடுக்க முயற்­சிக்­கின்­றது. ஆனால் அவ்­வாறு நாட்டின் எதிர்­காலம் குறித்து சிந்­திக்­கின்­ற­வர்­களை தடுக்க முடி­யாது.
பெரும்­பான்­மையை நிரு­பிக்க முடியும்

ஊவா மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுடன் நாங்கள் பேச்சு நடத்­தி­வ­ரு­கின்றோம். விரைவில் எம்மால் பெரும்­பான்­மையை ஊவா மாகாண சபையில் நிரூ­பிக்க முடியும். பெரும்­பான்­மையை இழக்க நேரிடும் என்­ப­தா­லேயே ஊவா மாகாண சபையை ஒத்­தி­வைத்­துள்­ளனர். அதா­வது குளிர் என்று கூறி மாகாண சபை அமர்வை ஒத்தி வைத்­துள்­ளனர். இதன்­மூலம் மக்­களின் பிர­தி­நி­திகள் எவ்­வாறு செயற்­ப­டு­கின்­றனர் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

நீதி­மன்றம் செல்வோம்

ஊவா மாகாண சபையில் வார இறு­தியில் எம்மால் பெரும்­பான்மை பலத்தை நிரூ­பிக்க முடியும். நாங்கள் மாகாண உறுப்­பி­னர்­க­ளுடன் பேச்சு நடத்­தி­வ­ரு­கின்றோம். ஊவா மாகாண சபையில் இவ்­வார இறு­திக்குள் எங்­க­ளுக்கு பெரும்­பான்மை பலம் கிடைத்­து­விடும். இந்­நி­லையில் வார இறு­தியில் சத்­தியக் கட­தா­சி­களை ஒன்­றி­ணைத்து ஆளு­ந­ரிடம் ஆட்­சி­ய­மைக்க அனு­மதி கோருவோம். அவர் அனு­மதி வழங்­கா­விடின் மேல் நீதி­மன்­றத்தில் மனு தாக்கல் செய்து ஊவா மாகாண சபை அமர்வை நடத்தி ஆட்­சியை கைப்­பற்­றுவோம் .

இதற்கு முன்னர் 1994 ஆம் ஆண்டு மற்றும் 2001 ஆம் ஆண்­டு­களில் இவ்­வாறு நடந்­துள்­ளது. விரைவில் மாற்றம் ஏற்­படும். ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்­பிலும் மைத்­தி­ரி­பால சிறி­சேன சார்­பிலும் நாங்கள் பேச்சு நடத்­தி­வ­ரு­கின்றோம்.

குறுந்­த­கவல் அனுப்­பினோம்

இதே­வேளை ஊவா மாகாண முத­ல­மைச்சர் தொடர்ந்து சபை அமர்வை நடத்­து­வதை ஒத்­தி­வைத்­துள்ளார். இதனை தொடர்ந்து செய்ய முடி­யாது. உறுப்­பி­னர்­களை ஒன்­றி­ணைத்து பெரும்­பான்மை பலம் இருப்­ப­தாக முத­ல­மைச்சர் செய்­தி­யாளர் மாநாட்டை நடத்­தினார். அந்த செய்­தி­யாளர் மாநாட்டில் இருந்த உறுப்­பி­னர்கள் எமக்கு குறுந்­த­கவல் மூலம் எப்­போது வர­வேண்டும் என்று கேட்டு செய்தி அனுப்­பிக்­கொண்­டி­ருந்­தனர். எனவே நாங்கள் ஊவா மாகாண சபையில் வார இறு­தியில் பெரும்­பான்­மையை காட்­டுவோம்.

சூடு அதிகம் என அமர்­வு­களை ஒத்­தி­வைக்­கலாம்

இன்னும் சில மாகாண சபை­களில் சூடு அதிகம் என்று அமர்­வு­களை அர­சாங்கம் ஒத்­தி­வைத்­தாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு இல்லை. அந்­த­ள­வுக்கு அவர்­க­ளுக்கு வீழ்ச்சி ஏற்­பட்­டு­வ­ரு­கின்­றது. நாட்டில் பாரிய அர­சியல் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. மக்கள் மைத்­தி­ரி­பால சிறி­சேன பக்கம் வந்­து­கொண்­டி­ருக்­கின்­றனர். மாகாண சபை உறுப்­பி­னர்கள் கோடிக்­க­ணக்கில் பெறு­ம­தி­யா­ன­வர்­க­ளாக உள்­ளனர்.

பைல்கள் எங்கே?

பைல் கதை­களை கூறு­கின்­றனர். அதா­வது ஆளும் கட்­சி­யி­லி­ருந்து இந்தப் பக்கம் வர திட்­ட­மிட்டு தற்­போது வராமல் இருக்­கின்­ற­வர்­க­ளுக்கு சில­வேளை பைல் இருக்­கலாம். ஆனால் தைரி­யத்­துடன் இந்தப் பககம் வந்­த­வர்­க­ளுக்கு பைல் இல்லை. மேலும் பைல்கள் இருந்தால் அவற்றை வெளியில் போடுங்கள். எனினும் நாங்கள் எதிர்­கா­லத்தில் தொகுதி தொகு­தி­யாக சென்று அவர்­களின் பைல்­களை வெளியில் போட நட­வ­டிக்கை எடுப்போம்.

ஜனா­தி­பதி தவ­று­த­லாக பைல் கதையை கூறி­விட்­ட­தாக அமைச்­சர்கள் சிலர் தெரி­வித்­துள்­ளனர். அவ்­வாறு கூறு­கின்­ற­வர்­க­ளுக்கு பைல்கள் இரு­க்கும் என்று நாங்கள் கரு­து­கின்றோம். அத­னால்தான் அவர்கள் இவ்­வாறு கூறு­கின்­றனர்.

எரி­பொருள் விலையை குறை­யுங்கள்

இதே­வேளை உலக சந்­தையில் மசகு எண்­ணெயின் விலை என்­று­மில்­லா­த­வாறு குறை­வ­டைந்­துள்­ளது. 115 டொல­ராக இருந்த ஒரு பீப்பாய் தற்­போது 60 டொலர்­க­ளாக குறை­வ­டைந்­துள்­ளது. இந்­நி­லையில் இவ்­வாறு பாரி­ய­ளவில் எரி­பொ­ருளின் விலை குறை­வ­டைந்தும் ஏன் அர­சாங்கம் உள்­நாட்டில் எரி­பொ­ருளின் விலையை குறைக்­காமல் உள்­ளது என்று கேட்­கின்றோம். எனவே உட­ன­டி­யாக எரி­பொ­ருளின் விலையை குறைக்­கு­மாறு அர­சாங்­கத்தை கோரு­கின்றோம். இந்த விட­யத்தில் தாம­தப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­க­வேண்டாம்.

பால்மா விலையை குறை­யுங்கள்

நியூ­சி­லாந்தின் டொலரின் பெறு­மதி 15 வீதத்­தினால் வீழ்ச்­சி­கண்­டுள்­ளது. எனவே நியூ­சி­லாந்­தி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­படும் பால்மா வகை­களின் விலையை குறைக்க முடியும். உட­ன­டி­யாக இதற்­கான நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ளு­மாறு கூறு­கின்றோம். அத்­துடன் நாட்டின் அண்­மைக்­கா­ல­மாக பாரிய மழை­வீழ்ச்சி பதி­வா­கி­வ­ரு­கின்­றது. எனவே மின்­சார கட்­ட­ணத்­தையும் குறைக்க முடியும். அந்­த­வ­கையில் மைத்­திரி யுகத்தில் பாரிய விலைக் குறைப்­புக்கள் இடம்­பெறும் என்­ப­த­னையும் தெரி­விக்­கின்றோம்.

ஆனால் அர­சாங்கம் எரி­பொ­ருட்­களின்

விலையை குறைக்­காமல் இருக்­கின்­றது. ஜனாதிபதியின் பதாதைகள் அனைத்துஇடங்களிலும் உள்ளன. ஆனால்

மைத்திரிபால சிறிசேன மக்களின் மனதில் உள்ளார். எவ்வாறெ னினும் இவ்வாறு பதாதை செலவுக்காக எரிபொருள் விலையை குறைக்காமல் உள்ளீர்களா என்று வினவு கின்றோம்.

இது இவ்வாறு இருக்க கிராமங்களில் சமுர்த்தி கொடுப்பனவுக்காக விண் ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சமுர்த்தி கொடுப் பனவையும் அதிகரிப்பதாக கூறியுள்ளனர். இவை அனைத்தும் அரசியல் ஊழலாகும். இவர்களின் அரசியல் வங்குரோத்து நிலை இதன்மூலம் தெரிகின்றது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :