நிந்தவூர் அல்-அதான் வித்தியால மாணவிக்கு பாராட்டு !


சுலைமான் றாபி-

புலமைப்பரிசில் பரீட்சையில் நிந்தவூர் அல்-அதான் வித்தியாலயம் சார்பாக அதிக புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவி எஸ்.பாத்திமா நுசைபாவினைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (01.12.2014) பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி ஏ.எம். சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம். சலீம் ஜப்பானின் விஷேடகல்வி பயிலுனர் செல்வி. சகோரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவியை பாராட்டி கௌரவித்தனர். இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் திருமதி ரி.எம். சுபைர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

இதேவேளை மாணவி எஸ்.பாத்திமா நுசைபா (159) புள்ளிகளைப் பெற்று இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :