கிழக்கு மாகாண சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான எம்.எஸ்.எம். அமீர் அலி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொள்ளவுள்ளார். என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அவருக்கு பிரதியமைச்சர் பொறுப்பும் உடனடியாக வழங்கப்படவுள்ளது.
இது தெடார்பில் அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அரச தலைமையுடன் பேசியதனையடுத்து அதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம் நாளை 3 ஆம் திகதி கொழும்பில் கூடி ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஆராயவுள்ளது. பெரும்பாலும் அந்தக் கட்சி நாளை இந்த விடயத்தில் முடிவு ஒன்றினை எட்டவுள்ளதாகவும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment