அஸ்லம் எஸ்.மௌலானா-
மலேசியாவின் ஆளும் கட்சியான ஐக்கிய மலே தேசிய முன்னணியின் (UMNO) சர்வதேச மாநாடு நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க் கிழமையும் அந்நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இடம்பெற்றது.
மலேசியப் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் மு.கா.குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பங்கேற்றார்.
இன்று இடம்பெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் இவருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மு.கா. செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி, அமைச்சர் ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளர் எம்.எச்.எம்.சல்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டின் இறுதி அமர்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சிறப்புரையாற்றினார். இந்த சர்வதேச மாநாட்டில் எழுபதுக்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை மேற்படி ஐக்கிய மலே தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றுக்கு இடையிலான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நாளை புதன்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment