பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியவற்றின் அனுமதியுடன் மருதமுனை ஒன்லைன் ஸ்தாபகரும், நிறைவேற்றுப் பணிப்பாளருமான சுகையில் ஜமால்தீன் அவர்களின் ஆலோசனையில் ஒன்லைன் அணியினர் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லந்தை மீரியபெத்த மக்களுக்காக மருதமுனைப் பிரதேசத்தில் சேகரித்த 2,31,601 ரூபா நிதியும் ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்களும் ஒன்லையினின் சிரேஸ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் முகாமையாளர் ஏ.எச்.எம்.அஸாம் ஆகியோர் தலைமையிலான மருதமுனை ஒண்லையின் அணியினர் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின்
தலைவர் மௌலவி கே.எல்.எம்.ஹனிபா, செயலாளர் மௌலவி ஏ.ஆர்.எம்.சுபையிர் ஆகியோர் தலைமையிலான பிரதி நிதிகளிடம் மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலில் வைத்து நேற்று இரவு (05-11-2014)கையளத்தனர் இந்த நிதி விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின்
செயலாளர் மௌலவி ஏ.ஆர்.எம்.சுபையிர் உறுதியளித்தார்.
ஒன்லைன் அணியின் முகாமையாளர்; ஏ.எச்.எம்.அஸாமின் நெறிப்படுத்தலில் கடந்த நான்கு தினங்களாக ஒன்லைன் அணியினர் இந்த நிதியை சேகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment