அஸ்வராலேயே முஸ்லிம்களுக்கு பிரச்சினை!

ளும் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­ பினர் அஸ்­வ­ரி­னா லேயே முஸ்­லிம்­க­ளுக்கு பிரச்­சி­னை­களே தவிர எம்மால் அல்ல என்று தெரி­வித்த ஜன­நா­யக தேசியக் கூட்­டணி எம்.பி.யான சுனில் ஹந்­துன்­னெத்தி தேர்­தலின் கட்­சி­யொன்றின் சார்பில் போட்­டி­யிட்டு இந்த சபைக்கு வருகை தர முடியுமா என்று அஸ்­வரைப் பார்த்து கேள்­வி­யெ­ழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை அமர்வின் போது இடம்­பெற்ற வரவு செலவுத் திட்­டத்தின் நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு மற்றும் நீர்­வள முகா­மைத்­துவம் அமைச்­சு மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றினார்.

இதன் போது நீர் வழங்கல் வடி­கா­ல­மை ப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் இணைப்­பாளர் மீது பல குற்றச் சாட்­டுக்­களை சுனில் ஹந்­துன்­னெத்தி எம்.பி. முன்­வைத்தார்.

இத­னை­ய­டுத்து குறுக்­கீடு செய்த அஸ்வர் எம்.பி. குறித்த இணைப்­பாளர் ஒரு முஸ் லிம் என்­ப­த­னா­லேயே சுனில் ஹந்துன்­னெ த்தி எம்.பி. இப்­படி குற்றம் சுமத்­து­வ­தாக கூறினார்.

இதற்குப் பதி­ல­ளித்த ஹந்­துன்­னெத்தி எம்.பி. முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு போதும் எம் மால் எந்தப் பிரச்­சி­னையும் கிடை­யாது. ஆனால் அஸ்வர் எம்.பி.யே முஸ்­லிம்­க­ளு க்கு பிரச்­சி­னை­யாக இருந்து வரு­கிறார் என்று கூறி­ய­துடன் கட்­சி­யொன்றில் போட்­டி­யிட்டு உங்­களால் இந்த சபைக்கு வர முடி­யுமா? என்று அஸ்வர் எம்.பி.யைப் பார்த்து கேள்வி எழுப்பியதுடன் முதலில் அதனைச் செய்து காட்டுங்கள் என்றார்.
 <வீரகேசரி>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :