கொழும்பு மட்டக்குளி எஸ்.ஜெயராணி அகில இலங்கை சமாதான நீதிபதியாக நியமனம்.


பைஷல் இஸ்மாயில்-

கொழும்பு மட்டக்குளியைச்சேர்ந்த காலஞ்சென்ற சுடலை மணி, சண்முக வடிவு ஆகியோரின் புதல்வி எஸ்.ஜெயராணி அகில இலங்கை சமாதான நீதிபதியாக கொழும்பு மாவட்ட நீதி மன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

இவர் தனது ஆரம்பக்கல்வியை கொழும்பு சென் ஆன்ஸ் கல்லூரியிலும், உயர்கல்வியை வெல்லவத்தை சைவ மங்கையர் கல்லூரியிலும் கற்று இன்று கொழும்பு மட்டக்குளி செந்தோமஸ் மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையாற்றுகிறார்.

தனது வாழ்வில் கலைத்துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் கலை, கலாச்சார, சமய விடையங்களில் அதிக ஆர்வத்துடன் சமூக அமைப்புக்களிலும் உறுப்பினராக செயற்பட்டுவருகிறார்.

இவருக்கான அகில இலங்கை சமாதான நீதிபதிக்குரிய படிவத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், இவரிடம் கையளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :