முசலிப்பிரதேச குக்கிராமங்களை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சற்றுத்திரும்பிப் பார்ப்பார்களா?

முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்-

ள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் இலவச டிஸ்கவரி மோட்டார் சைக்கிளும் , 25000/= பண ஒதுக்கீடும் செய்யப்பட உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முசலிப்பிரதேசத்தில் ஏறத்தாழ 30 கிராமங்கள் உள்ளன.

இவற்றில் சில கிராமங்கள் பெரியவை(சனத்தெகையில்) சில கிராமங்கள் சிறியவை , பெரிய கிராமங்களை மையமாகக் கொண்டே உள்ளுராட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கு கடந்த காலங்களில் அமைச்சரால், 1 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போது இவர்கள் சிறிய கிராமங்களை கைவிட்டு விட்டு , தம்தம் கிராமங்களில் மட்டும் அபிவிருத்தி வேலையில் ஈடுபட்டுக் கொண்டனர்.இதனால் சிறிய கிராம மக்கள் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

இதே நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது.அவர்களின் வாக்குகள் எப்படி தேவைப்பட்டதோ, அப்படி அபிவிருத்தியையும் நியாயமாகச் செய்ய வேண்டிய தார்மீகக் கடமை இவர்கட்கு உண்டு.இவர்கட்கு சரியான வழிகாட்டலையும் , ஆலோசனையையும் அமைச்சர் அவர்கள் வழங்கவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :