அட்டாளைச்சேனை கோணாவத்தையில் இருக்கும் அந்நூர் மகா வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இன்று காலை பெய்த இடைவிடாத மழை காரணமாக அட்டாளைச்சேனையில் பல பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கி நின்றது.
மாணவர்களுக்கான இறுதியாண்டு பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் இத்தறுணத்தில் மழைபெய்வதாலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதனாலும் மாணவர்கள் பெரும் அசெளகரியங்களை மேற்கொள்ள நேரிடுகிறது.
வெள்ள நீரை அகற்றும் பணிகளில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ் மற்றும் பொதுமக்கள் பலரும் சேர்ந்து மும்முறமாக செயல்பட்டுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.




0 comments :
Post a Comment