ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவிற்கு இணையாக போட்டியிட எவரேனும் உள்ளனரா?

னா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ வினால் மூன்றா­வது முறை­யாக ஜனா­தி­பதி தேர்­த லில் போட்­டி­யிட முடி­யுமா? முடி­யாதா? என்ற தேவை­யற்ற போலி பிர­சா­ரங்­களை செய்து வரும் எதிர்க்­கட்­சிகள், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு இணை­யாக தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு எவ­ரேனும் இருக்­கின்­றாரா என்­பதை தெளிவு­ப­டுத்­து­வது அவ­சியம் என தெரி­விக்கும் சீனி கைத்­தொழில் அபி­வி­ருத்தி அமைச்­சர் லக்ஷ்மன் சென­வி­ரத்ன, எதி­ர­ணி­களின் எல்­லா­வித சூழ்ச்­சி­க­ளு க்கும் முகம் கொடுத்து எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ மூன்­றா­வது முறை­யா­கவும் வெற்றி வாகை சூடு­வது நிச்­சயம் எனவும் தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி லேயே மேற்­க ண்­டவாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், மூன்­றா­வது முறை­யாக ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ போட்­டி­யி­டு­வது தொடர் பில் அச்சம் கொண்­டுள்ள பிர­தான எதிர்க்­கட்­சி கள் உட்­பட ஏனைய எதிர்க்­கட்­சிகள் இது தொடர்பில் போலி­யான பிர­சா­ரங்­க­ளையும் நீதிக்கு முர­ணான கருத்­துக்­களையும் தெரி­விக்கும் முன் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு இணை­யாக போட்­டி­யிட எவ­ரேனும் ஒரு வேட்­பாளர் இருக்­கின்­றாரா? என்­பதை தெளிவு­ப­டுத்­து­வது அவ­சியம்.

நாட்டில் நில­விய முப்­பது வருட யுத்த காலத்தின் போது பல்­வேறு சூழ்ச்சி வேலை­களை செய்­வ­தற்கு முயற்­சித்த எதிர்க்­கட்சி தரப்­பினர் அதனை இக்­கால கட்­டங்­களில் செய்­வ­தற்கு முயற்­சித்து வரு­கின்­றனர்.

இத ற்கு நாம் ஒரு போதும் இட­ம­ளிக்க போவதி ல்லை. ஆளும் கட்­சியில் இருக்கும் தரப்­பினர் சிலர் பிர­தான எதிர்க்­கட்­சிக்கு செல் லும் முயற்­சியில் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டுவது தொடர்பில் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ ரால் கேள்வி எழுப்­பப்­பட்ட போது அதற்கு கருத்து தெரி­வித்த அமைச்சர், எமது கட்­சிக்குள் எவ்­வா­றான முரண்­பா­டுகள் இருந்­.தாலும் அது குறித்த தரப்­பி­ன­ருடன் பேசி தீர்­மா­னிக்­கப்­படும்.

வெறுமனே எதிர்க்­கட்­சி­களே இவ்வாறான போலி கருத்துக்களை பரப்பி வருகின்றன.

எவ்வாறான முரண்பாடுகள் இருந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது வெற் றிக்காக உழைத்திடுவோம் என தெரிவித் தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :