அரசியலமைப்பு சட்டத்தில் இல்லாதது உயர்நீதிமன்ற வியாக்கியானத்தில் உள்ளது!ரவி கருணாநாயக்க

மூன்­றா­வது தட­வை­யா­கவும் ஒருவர் இந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகப் போட்­டி­யிட முடி­யாது என்­பது அர­சி­ய­ல­மைப்பில் தெளி­வாகக் கூறப்­பட்­டுள்­ளது. எனினும் உயர் நீதி­மன்­றத்தின் வியாக்­கி­யா­னத்தில் இருக்­கின்­றது. இதுதான் எமது நாட்டின் ஜன­நா­ய­க­மாக இருக்­கின்­றது என்று ஐக்­கிய தேசிய கட்சி எம்.பி. ரவி கரு­ணா­நா­யக்க நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை அமர்வின் போது இடம்­பெற்ற 2015ஆம் ஆண்­டுக்­கான வரவு- – செல­வுத்­திட்­டத்தின் கைத்­தொழில், வாணிபம், முத­லீட்டு ஊக்­கு­விப்பு மற்றும் கூட்­டு­றவு உள்­நாட்டு வர்த்­தகம் ஆகிய அமைச்­சுக்கள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். ரவி கரு­ணா­நா­யக்க எம்.பி. இங்கு மேலும் கூறு­கையில்,

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மூன்­றா­வது தட­வை­யா­கவும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடியும் என உயர் நீதி­மன்றம் தெரி­வித்து விட்­ட­தாக கூறி சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறி­பா­ல டி சில்வா இங்கு வந்து கட­தா­சி­யொன்றைப் பார்த்து வாசித்து விட்டுச் சென்­றுள்ளார்.

ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷ மூன்­றா­வது தட­வை­யா­கவும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு தனக்கு இய­லுமை இருக்­கின்­றது என்ற வகையில் உயர் நீதி­மன்

றத்தின் விளக்­கத்­தினை பாரா­ளு­மன்­றத்­துக் குக் கொண்டுவந்து அது பாரா­ளு­மன்­றத்தி­ னூ­டாக உயர்­நீ­தி­மன்­றத்­துக்கு கொண்டு செல்­லப்­பட வேண்டும். அவ்­வாறு உயர் நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு செல்­லப்­ப­டு­கின்ற இவ்­வி­டயம் பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்பிவைக்­கப்­பட்டு அது சபாநாய­க­ரூ­டாக இந்த சபைக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் அறி­விக்­கப்­படல் வேண்டும். ஆனாலும் கட­தாசி ஒன்­றினைக் கொண்டு வந்த அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்­மானம் என்ற ரீதி யில் வாசித்துவிட்டு சென்­றுள்ளார்.

எமது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தின் பிர­காரம் ஒருவர் மூன்­றா­வது தடவை யாகவும் போட்டியிடுவதற்கான இயலுமை இல்லை. எனினும் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தில் அவ்வாறான ஏற்பாடு இருக்கின்றது. இதுதான் இந்நாட்டின் ஜன
நாயகமாக இருக்கின்றது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :