அண்மையில் ஹல்துமுல்ல, கொஸ்லந்த மற்றும் மிரியாபெத்த ஆகிய இடங்களில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிந்தவூர் மக்கள் சார்பாக சுமார் 11 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப்பொருட்கள் நேற்றைய தினம் (04.11.2014) இராணுவத்தின் வழித்துணையுடன் அனுப்பப்பட்டன.
இந்நிகழ்வில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல் ஹாஜ் ஏ.எம்.எம். இஸ்மாயில் அவர்களால் அம்பாறை மாவட்ட சிவில் விவகார அதிகாரி கேர்ணல் ஹரன் வீரசிங்க அவர்களிடத்தில் கையளிப்பட்டது. இந்நிகழ்வில் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர், செயலாளர் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிவாரணப்பொருட்களை இராணுவத்தினரிடம் வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment