அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீடம் நேற்று இரவு அதன் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் கொழும்பில் கூடியது.
நாட்டில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் கட்சியின் ஆதரவு யாருக்கு வழங்குவது என்ற ஆலோசனையைப்பெறுவதற்காக கூடிய இக்கூட்டத்தில் பலரும் பல கருத்துக்களை முன்வைத்தனர்.
ஆனால் அவசர முடிவாக எதனையும் எடுக்காத நிலையில் இன்றிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவரும் தனிக்குழுவாக முடிவெடுப்பது என்றும் தனியாகவே இயங்குவது என்றும் தீர்மாணிக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி ஆறுதலாக ஆலோசித்து முடிவெடுப்பது என்றும் தீர்மாணிக்கப்பட்டதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் இம்போட்மிரர் செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment