வன்முறையை கையிலெடுப்பதற்கு யாரையும் அனுமதிக்க மாட்டோம் -அமைச்சர் நிமல் சிறிபால!

மது உரிமைகளை கேட்டு நாட்டில் யாரும் வன்­மு­றை­யற்ற ரீதி­யில் ஆர்ப்­பாட்­டங்கள் செய்­யலாம். சத்தம் போட லாம். பாத­யாத்­திரை கூட செல்­லலாம். அது நாட்டில் காணப்­ப­டு­கின்ற ஜனநாயக உரி­மை­யாகும்.

ஆனால் வன்­மு­றை­யை கையில் எடுப்­ப­தற்கு யாரையும் அனு­­ம­திக்க மாட்டோம் என்று சிறி­லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலை­வரும் அமைச்­ச­ரு­மான நிமல் சிறி­பால டி. சில்வா தெரி­வித்தார்.

இதே­வேளை வெளி­யி­லி­ருந்து தீர்வு கிடை­க்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நம்­பிக்­கொண்­டி­ருந்தால் அது நடக்­காது. தீர்வை அடையும் இணக்­கப்­பாட்­­டைப் பெறு­வ­தற்கு தமி­ழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வர­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்­றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யிட்ட அமைச்சர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறிய­தா­வது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமது உரிமை­களை பெறு­வ­தற்காக ஜன­நா­யக ரீதியில் செயற்­பா­டு­களை மேற்­கொள்­ளலாம். தமது உரிமைகளை கேட்டு நாட்டில் யாரும் வன்­மு­றை­யற்ற ரீதி­யில் ஆர்ப்­பாட்­டங்கள் செய்­யலாம். சத்தம் போடலாம். பாத­யாத்­திரை கூட செல்­லலாம். அது நாட்டில் காணப்­ப­டு­கின்ற ஜனநாயக உரி­மை­யாகும்.

இது ஜன­நா­யக நாடு. எனவே அனை­வ­ருக்கும் அந்த உரிமை உள்­ளது. நாங்கள் கூட எதிர்க்­கட்­சியில் இருக்­கு­ம்­போது பாத­யாத்­திரை சென்­றுள்ளோம். ஆனால் வன்­மு­றை­யை கையில் எடுப்­ப­தற்கு யாரையும் அனு­­ம­திக்க மாட்டோம். ஜன­நா­ய­கத்தை மீறி வன்­மு­­றை­களில் ஈடு­பட நாங்கள் அனும­தி வழங்­க­மாட்­டோம்.

இதே­வேளை தேசிய பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­­பு பாராளுமன்றத் தெரி­வுக்­­கு­­ழு­வுக்கு வர­வேண்டும். நாங்கள் தெரி­வுக்­கு­ழு­வு­க்கு வரு­மாறு கூட்­ட­மைப்பை கோரி­யுள்ளோம். தற்­போது கூட அழைப்பு விடுக்­கின்றோம்.

இத­னை­வி­டுத்து வெளி­யி­லி­ருந்து தீர்வு கிடை­க்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நம்­பிக்­கொண்­டி­ருந்தால் அது நடக்­காது. தீர்வை அடையும் இணக்­கப்­பாட்­­டைப் பெறு­வ­தற்கு தமி­ழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வர­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

என்று நாம் இந்­திய பிர­ம­தமரிடமும் கூறி­யுள்ளோம். அவரும் அத­னை ஏற்­று­க்­கொண்­டுள்ளார்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்­ட­­மைப்பு தெரி­வுக்­கு­ழு­வுக்குவரும்­வரை நாங்கள் காத்­தி­ருக்­கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :