இராமகிருஸ்ணமிசனின் மூத்த துறவி காரைதீவு மண் பெற்றெடுத்த மற்றுமொரு துறவி சேவையின் சிகரம் சுவாமி நடராஜானாந்த ஜீ மஹராஜின் 111வது ஜனன தினம் இன்று 29ஆம் திகதி சனிக்கிழமையாகும்.
அதனையொட்டி அவர் பிறந்த காரைதீவு மண்ணில் நேற்று 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் ஞாபகார்த்தமாக பல நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன. பிரதான நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக முன்றலிலுள்ள அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலையணிவித்தலுடன் ஆரம்பமாகும். காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
மட்டு. இ.கி.மிசன் மடாலயத்திலிருந்துகொண்டு இலங்கையிலிருந்த 26 மிசன் பாடசாலைகளையும் கவனித்து முகாமையயாளராக சீரிய சேவையாற்றிய சுவாமி நடராஜானந்தா 1903 நவம்பர் மாதம் 29ஆம் திகதி காரைதீவில் கதிர்காமத்தம்பி விதானையாருக்கும் மயிலம்மாவிற்கும் மகனாக அவதரித்தார்.
கேம்பிரிச் சீனியர் லண்டன் மொற்றிகுலேசன் பரீட்சைகளில் சித்திபெற்று ஆசிரியராக நீர்ப்பாசன பொறியியல்உதவியாளராக சேவையாற்றி இ.கி.மிசனில் 1935இல் இணைந்தார்.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நெருங்கிய தொடர்பையடுத்து நிர்வேதசைதன்யர் எனும் துறவறப்பெயருடன் துறவறம் புகுந்து சுவாமி அகண்டானந்தரை குருவாகக்கொண்டு சுவாமி நடராஜானந்தரானார்.
1967.03.18ஆம் திகதி அதிகாலை பகவான் ஸ்ரீ ராமகிருஸ்ண பரமஹம்சரின் திருவுருவப்படத்தை மார்பில் தாங்கியவண்ணம் இறைவனடி சேர்ந்தார்.
சுவாமி நடராஜானாந்தா ஜீயின் 111வதுஜனன தின நிகழ்வானது இந்து சமய விருத்திச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்று 28.11.2014 பிரதான வீதியில் காரைதீவு பிரதேச செயலகத்துக்கு அருகாமையில் உள்ள சுவாமியின் திருவுருவச்சிலையருகே இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பகவான் ஸ்ரீராமகிருஷணரின் வேத பாராயணம், உருவச்சிலைக்கு மாலை அணிவித்தலும், புஷ்பாஞ்சலியும், மங்களாராத்தி, தலைமையுரை, சிறப்புரை முதலான நிகழ்வுகள் நடைபெற்றன.. இதன் போதான படங்கள் சில.....
.jpg)
.jpg)
%2B-%2BCopy.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment