ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வாரியப்பொல தேர்தல் தொகுதியில் ஐந்து கிராம உத்தியோகஸ்தர் பிரிவிலுள்ள சுயதொழில் ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 85 இலட்சம் ரூபா பெறுமதியான சுயதொழில் உற்பத்திப் பொருட்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கும் நிகழ்வு வாரியப்பொல பிரதேச செயலக வளாகத்தில் 19-11-2014 நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிரேஷ;ட அமைச்சர் எஸ். பி நாவின்ன கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி வைத்தார்.
இதில் ஜுக்கி மிசின், தண்ணீர் பம், தச்சு மற்றும் மேசன் மார்களுக்கான உபகரணங்கள் வழங்குதல் மற்றும் புல் வெட்டும் இயந்திரங்கள், சில்லறைக்கடை வியாபாரிகளுக்கு கடனுதவி போன்றவைகள் வழங்கி வைக்கப்பட்டன,
வாரியப்பொல பிரதேச சபைத் தவிசாளர் ஆனந்த ஜயலத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment