தேர்தலில் போட்டியிட தடை உள்ளதா? 10ம் திகதிவரை உயர் தீநிமன்றத்தின் பதிலை காத்திருக்கும் ஜனாதிபதி

18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய, மேலும் ஒரு தவணை பதவிக் காலத்திற்காக தேர்தலில் போட்டியிட தடை உள்ளதா? என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

உயர்நீதிமன்ற பதிவாளரினால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதமொன்று இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ள விடயம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் எழுத்துமூல விளக்கத்தை சமர்பிக்க இம்மாதம் 7 ஆம் திகதி பிற்பகல் 03 மணி வரை காலஅவகாசம் உள்ளதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரின் ஆலோசனைக்கு அமைய, உயர் நீதிமன்ற பதிவாளரால், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :