மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் உதவுமாறு ஹரீஸ் எம்.பி வேண்டுகோள்!

ஹாசிப் யாஸீன்-

துளை, கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு 'நாம் இலங்கையர்கள்' என்று இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் உதவுமாறு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதுளை, கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மன்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மன்சரிவானது எமது நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்குப் பின்னரான இரண்டாவது பேரழிவாகும். இதில் ஒரு கிராமமே அழிவுற்றுள்ளதுடன் பாரிய சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதனையிட்டு அம்மக்களை என்னி நான் கவலையடைகின்றேன்.

இம்மண்சரிவில் உயிர்களை இழந்து தவிர்க்கும் குடும்பங்களுக்கும், தாய், தகப்பனை இழந்து தவிர்க்கும் சிறார்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இம்மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் மந்தகதியில் செல்வதாகவும் அதற்கு காலநிலை இடம் கொடுக்கவில்லை எனவும் அறிகின்றேன்.

எனவே இவ்மீட்புப்பணிகளில் ஈடுபட அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் இளைஞர்கள் முன்வர வேண்டும். அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்க அனைவரும் ஒன்றிணையுமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :