காத்தான்குடி மஸ்ஜிதுல் ஹூதா சின்னப் பள்ளிவாயலில் சிரமதான நிகழ்வு

 பழுலுல்லாஹ் பர்ஹான்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் முதலாவது மாபெரும் சிரமதான நிகழ்வு 04-10-2014 சனிக்கிழமை காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் ஹூதா சின்னப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர் எம்.எப்.எம்.பிர்னாஸ் தலைமையில் இடம்பெற்ற இவ் சிரமதான நிகழ்வில் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் உப தலைவர் ஏ.எஸ்.ஏ.ஜௌஸகி ,கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.சிஹாப்,அதன் பொருளாளர் எம்.ஏ.எம்.அல்பர்,உப செயலாளர் எம்.என்.எம்.பஸ்லி உட்பட அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் ஹூதா சின்னப் பள்ளிவாயல் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் மனித நேயம் பேணும் மாபெரும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :