பெண்கள் சாரணியர் ஒருநாள் பயிற்சி முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இப்பயிற்சி முகாமில் சாரணிய மாணவிகள் சாரணிய இலச்சினை கோலம் இட்டதோடு, சமயல் பயிற்சிகளில் ஈடுபட்டு தமது திறமையினை வெளிக்காட்டினார்கள்.
நான்கு குழுக்களாக இடம்பெற்ற சமயல்கள் அதிதிகளுக்கு பரிமாரப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட குழுக்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் கௌரவ அதிதிகளாக முன்னாள் கல்விக்கல்லூரி விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா, முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட், கல்லூரி அதிபர் எம்.அமீன், ஆசிரியர்களான எம்.எம்.மஜீதியா, ஏ.ஜின்னாஹ், எஸ்.எம்.எம். றம்ஸான் மற்றும் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment