இறத்தல் குளம் பல மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.பார்வையிட்ட அமைச்சர் உதுமாலெப்பை

சலீம் றமீஸ்-

ம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேச இறத்தல் குளம் ஊடாக 1240 ஏக்கர் காணிகளில்  நெற்செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் அப்பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி இறத்தல்  குளம் பல மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இக் குளத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கும் நோக்கில் முதல் கட்டமாக  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசண அமைச்சரும், கிழக்கு மாகாண  சபை அமைச்சரவையின் பேச்சாளருமான, தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர்  தேச கீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் அங்கு நேரடியாக சென்று இறத்தல்  குளத்தினையும், இப்பிரதேசத்தினையும் பார்வையிட்டார்.

இந்த குளத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிப்பதற்கான அனைத்து  நடவடிக்கைகளையும் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன்,  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.

இறத்தல் குளத்தினை நேரடியாக பார்வையிடுவதற்கு பொத்துவில் பிரதேச செயலாளர்  என்.எம்.எம்.முஸாரத், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் அம்பாறை நீர்ப்பாசன  பணிப்பாளர் கே.டி.நிஹால் சிறிவர்த்தன, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர்  ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பொத்துவில் பிரதேச இணைப்பாளர் ஏ.பதுர்கான், உட்பட  நிர்வாக பொறியியலாளர்கள் ,விவசாய பிரதி நிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :