சம்மாந்துறை நகரின் கிராமங்களுக்கிட்ட பெயர்களினால் வெட்கம் அடைகிறோம்

ஏ.கே.எம் சப்று மிந்தார்-

ம்மாந்துறை நகரமானது பாரிய நிலப் பரப்பை தன்னகத்தே கொண்ட ஓர் அழகிய ஊராகும்.சம்மாந்துறையின் நில விஸ்தீரணத்தினால்,அதன் பகுதிகளை இலகுவாக அடையாளப் படுத்திக் கொள்ள குறித்த சில நிலப் பரப்புக்கள் குறித்த பெயர் கொண்டு அழைக்கப் படும்.மேலும் பல கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.

எனினும்,அதன் பெயர்களோ அடுத்த தலை முறையினரால் ஏற்றுக்கொள்ளப் படும் வண்ணம் உள்ளதா? என்ற வினாவை எழுப்பி விடை பெற எத்தனித்தால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

காத்தான்குடியின் வீதிகளின் பெயர்களை பாருங்கள் கர்பலாவீதி ,சைத்குதுப்வீதி. என்று அதன் சொல் வடிவமோ கருவோ தனி அழகு. கலிபாக்கலினதும், இஸ்லாமிய அறிஞ்சர்களினதும் இஸ்லாமிய வரலாறுகளையும் தொட்டுச் செல்லும் வண்ணம் நன்றாக சூட்டப்பட்டுள்ளது.

ஆனால். நமது சம்மாந்துறை கிராமங்களின் பெயர்கள் என்ன தெரியுமா..?? மலையடிக்கிராமம், உடங்கா, கல்லரிச்சல் ,தென்னம்பிள்ளை கிராமம் நெயினா காடு, கருவாட்டுக்கல்

இதன் கருப்பொருளில் என்ன இருக்கிறது??
இதனை பகிரங்கமாக எம்மால் அடையாளப்படுத்தி கூற முடியுமான பெயராக உள்ளதா??

நண்பர்களே!

நான் இதனை எழுதுவதானால் உங்கள் உள்ளங்களை பாதித்தால் மன்னிக்கவும். இப் பெயர்களுடன் சம்மாந்துறையில் உள்ள கிராமங்கள், பகுதிகள் அழைக்கப்படுவது சம்மாந்துறைக்கு அழகல்ல. இதன் பெயர் மாற்றங்கள் சிறந்த அரசியல் தலைமைகளால் தான் மேற் கொள்ள முடியும். சிறந்த அரசியல் தலைமைகளை உருவாக்க வேண்டும். நமது நகரம் மறு மலர்ச்சியடைய நண்பர்கள் அனைவரதும் ஒத்துழைப்பு வேண்டும்.இதை நாம் அடைய கல்வி எனும் ஆயுதமே சிறந்த வழி அதனை வழங்க உறுதி பூணுவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :