ஸ்ரீ தாந்தா முருகன் ஆலய உற்சவத்திற்கான புனித யாத்திரை நிகழ்வு

த.நவோஜ்-

ட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித்தெரு பொதுமக்களினால் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீ தாந்தா முருகன் ஆலய உற்சவத்திற்கான புனித யாத்திரை நிகழ்வு வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.

இவ் யாத்திரையானது புதூர், வவுணதீவு, வாழைக்காலை பிரதேசம் வழியாக ஸ்ரீ தாந்தா முருகன் ஆலயத்தைச் சென்றடையவுள்ளது. பின்னர் புளியந்தீவு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களில் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு யாத்திரைப் பயணம் தொடர்ந்து இடம்பெற்றது.

யாத்திரிகர்களுக்காக செல்லும் வழிகளில் இருக்கும் ஆலயங்களால் தண்ணீர்ப் பந்தல்கள் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பனிச்சையடி காளி கோயில் நிர்வாகத்தினரால் மதிய உணவும், பாவற்கொடிச்சேனை காளி கோயில் நிர்வாகத்தினரால் இரவு உணவும் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் பாவற்கொடிச்சேனை காளி கோயிலில் இரவு தங்குதல் இடம்பெற்று மீண்டும் நாளை காலை யாத்திரைப்பயணம் ஆரம்பம் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :