நாட்­டுக்கு பொது வேட்­பாளர் தேவை­யில்லை: தேசியத் தலை­மைத்­து­வமே தேவை-ஞான­சார தேரர்

நாட்­டுக்கு பொது வேட்­பாளர் தேவை­யில்லை. தேசியத் தலை­மைத்­து­வமே தேவை. அத்­த­லைவர் எவ்­வா­றான குணா­தி­ச­யங்­க­ளுடன் இருக்க வேண்­டு­மென்­பதை எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 3000 பிக்­கு­மார்­க­ளுக்கு மத்­தியில் பகி­ரங்­க­மாக அறி­விப்போம் என பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.
இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பி­ய­வர்கள் இந்­நாட்­டு சொந்­தக்­கா­ரர்களான சிங்­க­ள­வர்கள். இது தெரி­யா­த­வர்கள் பொது வேட்­பா­ளர்­க­ளாக முடி­யாது என்றும் தேரர் தெரி­வித்தார்.

கொழும்பில் அண்மையில் இடம்­பெற்ற பொது­ப­ல­சே­னாவின் மாநாட்டில் உரை­யாற்றும் போதே கல­கொட அத்தே ஞான­சார தேரர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

நாட்டில் இன்று ஜனா­தி­ப­தித்­தேர்தல் தொடர்­பான விவாதம் தலை­தூக்­கி­யுள்­ளது. இத்­தேர்­தலில் பொது வேட்­பாளர் ஒரு­வரை கள­மி­றக்­கு­வது தொடர்­பாக எதிர்க்­கட்­சிகள் தீவி­ர­மாக ஆலோ­ச­னை­களை நடத்தி வரு­கின்­றன. பொது வேட்­பா­ள­ருக்கு வலை வீசு­கின்­றனர். நாடு இன்று பயங்­க­ர­மான ஆபத்தை எதிர்­நோக்­கி­யுள்­ளது.

இந்­நாட்டை கட்­டி­யெ­ழுப்­பி­ய­வர்கள் இந்­நாட்டு சொந்­தக்­கா­ரர்களான சிங்­கள பெளத்­தர்கள். இந்த வர­லாற்று உண்மை தெரி­யா­த­வர்கள் பொது வேட்­பா­ள­ராக வர முடி­யாது. சிங்­கள பெளத்­தர்­க­ளுக்கு எதி­ரான சக்­திகள் நாட்­டுக்குள் தலை­தூக்­கி­யுள்­ளன.

இச்­சக்­தி­களை ஒழித்­துக்­கட்டி நாட்­டையும் சிங்­கள பெளத்­தர்­க­ளையும் பாது­காக்­கக்­கூ­டிய தேசிய தலை­மைத்­து­வமே இன்று நாட்­டுக்கு தேவைப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான ஒரு தலை­மைத்­து­வத்­துக்கே இந்­நாடு கைய­ளிக்­கப்­பட வேண்டும். தேசியத் தலை­மைத்­துவம் எவ்­வாறு இருக்க வேண்டும். என்­னென்ன குணா­தி­ச­யங்கள் இருக்க வேண்டும் என்ற விப­ரங்கள் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வரு­வ­தோடு திட்­டங்­களை தயா­ரித்து வரு­கின்றோம்.

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் கொழும்பில் 3000 பெளத்த குருமார் கலந்து கொள்ளும் எமது அமைப்பின் மாபெரும் மாநாடு நடத்தப் படவுள்ளது. இதன்போது தேசியத்தலைமைத்துவம் தொடர்பில் எமது தீர்மானத்தை பகிரங்கமாக அறிவிப்போம் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :