த.நவோஜ்-
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை கிராமத்தில் குரங்குகளின் தொல்லையால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மீறாவோடை ஆற்றுப் பகுதியில் இருந்து முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகும் குரங்குகள் வீட்டின் ஜன்னல் கண்ணாடி, வாகன கண்ணாடி, தொலைக்காட்சி பெட்டி போன்ற பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன.
இது தொடர்பாக இப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்! திடீர் என்று ஆற்றுப் பகுதியில் இருந்து வரும் குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவதாகவும், இதனால் சிறுவர்கள் பயப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குரங்களின் தொல்லைகளில் இருந்து பாதுகாப்புப் பெற்றுத் தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment