கைத்தொழிலில் ஈடுபடும் உற்பத்தியாளர்களின் தொழில் முயற்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் செயலமர்வு

த.நவோஜ்-

கைத்தொழில் அதிகார சபையால் சிறு கைத்தொழிலில் ஈடுபடும் உற்பத்தியாளர்களின் தொழில் முயற்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் பிரதேச செயலகங்கள் தோறும் செயலமர்வு நடாத்தப்பட்டு வருகின்றன.

இந்தவகையில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, ஏறாவூர் நகர், ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 85 சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்களுக்கு வாழைச்சேனை கிறஸ்தவ வாலிபர் சங்க மண்டபத்தில் வியாழக்கிழமை ஒரு நாள் செயலமர்வு நடைபெற்றது.

கைத்தொழில் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.எம்.ரணவீர தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் வளவாளர்களாக தொழில் திணைக்கள அதிகாரிகளும், கைத்தொழில் அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :