தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்டும்

லங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை மீறி தேசத்­து­ரோக செயல்­களில் ஈடு­படும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்டும் என வலி­யு­றுத்தும் அர­சாங்­கத்தின் பங்­காளிக் கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­மய விடு­த­லைப்­பு­லிகள் செய்த கொலைகள் தொடர்­பான சாட்­சி­யங்­களை கூட்­ட­மைப்­பினர் முதலில் தயார்­ப­டுத்த வேண்டும் என்றும் தெரி­வித்­தது.

ஐ.நா. மனித உரிமைஆணைக்­கு­ழுவின் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு சாட்­சி­ய­ம­ளிக்க விரும்­புவோர் தம்மை நாடினால் அதற்­கான ஏற்­பா­டு­களை செய்து கொடுக்க தயா­ராக இருப்­ப­தா­கவும் சம்­பந்தன் எம்.பி. யின் யுத்த கால பாரா­ளு­மன்ற உரை­களின் அறிக்­கையை தமது பக்க சாட்­சி­யங்­க­ளாக விசா­ர­ணைக்­கு­ழு­வுக்கு கைய­ளிக்­க­வுள்­ள­தா­கவும் சுமந்­திரன் எம்.பி. தெரி­வித்­துள்­ளமை தொடர்பில் ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊடகச் செய­லா­ளரும் மேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான நிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க மேலும் தகவல் தரு­கையில்;

வெள்­ள­முள்ளி வாய்க்­காலில் இடம்­பெற்ற யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்தும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் அதற்கு முன்­ப­தாக தமிழ் தலை­வர்­க­ளான அமிர்­த­லிங்கம் யோகேஸ்­வரன், நீலன் திருச்­செல்வம், சாம்­தம்பி முத்து உட்­பட தமிழ் தலை­வர்­க­ளையும் தமிழ் மக்­க­ளையும் கொலை செய்த விடு­த­லைப்­பு­லிகள் தொடர்­பான சாட்­சி­யங்­களை தேட வேண்டும்.

எமது இரா­ணு­வத்­தினர் தொடர்­பாக குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைப்­ப­தற்கு முன்­ப­தாக புலிகள் செய்த கொலை­களை பட்­டி­ய­லி­டுங்கள். அச் சாட்­சி­யங்­களை சர்­வ­தேச விசா­ர­ணைக்­கு­ழு­விடம் வழங்­குங்கள்.

நவிப்­பிள்ளை

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் ஆணை­யாளர் நாயகம் நவ­நீ­தம்­பிள்ளை பக்­கச்­சார்­பா­னவர். அண்­மையில் புலம்­பெயர் தமி­ழர்­க­ளோடு இணைந்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினர் நவிப்­பிள்­ளைக்கு பொன்­னாடை போர்த்தி மாபெரும் பிரியா விடை வைப­வத்தை நடத்­தினர்.

இதன்­போது புலம்­பெயர் தமி­ழர்கள் சர்­வ­தேச விசா­ர­ணைக்­கு­ழு­வுக்கு தமது ஆத­ர­வையும் சாட்­சி­யங்­க­ளையும் வழங்க வேண்­டு­மென நவிப்­பிள்ளை தெரி­வித்தார்.இதன் மூலம் நவிப்­பிள்ளை பக்­கச்­சார்­பா­ன­வ­ரென்றும் அவர் நிய­மித்த சர்­வ­தேச விசா­ர­ணைக்­குழு இலங்­கைக்கு எதி­ரா­ன­தென்றும் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பு

எனவே, இவ்­வா­றான தேசத்­து­ரோ­க­மான சர்­வ­தேச விசா­ரணை குழு­வுக்கு கூட்­ட­மைப்­பினர் சாட்­சியம் வழங்க முயற்­சிப்­பது இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை மீறும் செய­லாகும். எனவே அர­சாங்கம் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு எதி­ராக உட­ன­டி­யாக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விரிசல்

கூட்டமைப்பினரின் இவ்வாறான நடவடிக்கைகளால் தமிழ் சிங்கள மக்களிடையேயான நல்லுறவுகள் பாதிக்கப்படும். அது மட்டுமல்லாது இரு இனங்களிடையேயும் விரிசல் தலைதூக்குவதோடு பழிவாங்கும் மனோபாவங்களும் அதிகரிக்கும் என்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :