பொத்துவில் பிரதேசத்தில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம்

எம்.ஜே.எம். முஜாஹித்-

பொத்துவில் பிரதேசத்தில் அனர்த்த ஆபத்தை குறைக்கும் முகமாக அனர்த்த முகாமைத்துவ  மத்திய நிலையத்தினால் பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. 

பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம். முசரப் தலைமையில் பிரதேச செயலகத்தில்  நடைபெற்ற நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு உயிர் பாதுகாப்பு அங்கிகள், சமிஞ்சைகள், ஒலி எழுப்பும் கருவிகள், தொலைத் தொடர்பு உபகரணங்கள் என்பன  வழங்கப்பட்டுள்ளதாக உதவிப்பணிப்பாளர் எ.எல். சியாத் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். இவ்வாறான உபகணரங்கள் வழங்கப்பட்டுள்ளதால் எதிர் காலத்தில் அனர்த்தம் ஏற்படும்  போது ஆபத்தை குறைக்க முடியுமென உதவிப்பணிப்பாளர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :