ராஜித சேனாரத்தின 100 கோடி கோரி: ஞானசார தேரருக்கு நோட்டீஸ் அனுப்பிவைப்பு

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்ட கருத்துக்களால் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அதற்கு நஷ்ட ஈடாக ரூபா 100 கோடி வழங்க வேண்டும் எனக்கோரி கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தின தனது சட்டத்தரணி ஊடாக நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்தின சார்பாக அவரது சட்டத்தரணி சனத்வீரரத்தின இந்த நோட்டீஸை கலகொட அத்த ஞானசார தேரருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சட்டத்தரணி ஊடான நோட்டீஸில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த 5 ஆம் திகதி கலகொட அத்த ஞானசார தேரர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்தினவிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளியிட்டார்.

இதனால் எனது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள சட்டத்தரணி சரத் வீரரத்தின எனவே இதற்கு நஷ்ட ஈடாக இரண்டு வாரங்களுக்குள் ரூபா 100 கோடி செலுத்தப்பட வேண்டும் என்றும் அவ்வாறு நஷ்ட ஈடு செலுத்தப்படாவிட்டால் அத் தொகையை பெற்றுக்கொள்வதற்கான சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :