இக்பால் அலி-
தெல்தோட்டை ஜம்மியதுல் ஹைரிய்யாதுல் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் அஷஷய்க் முனீர் சாதிக் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் ஓமான் நாட்டு பிரதிநிதிகளால் தெல்தோட்டை உடபிட்டிய அல் ஹுஸ்னா மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமிய கலாசார மண்டபம் திறப்பு விழா 11-08-2014 நடைபெற்றது.
அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஓமான் நாட்டுப் பிரதிநிகளான ஹாஸிம் செய்யத் அப்துல்லாஹ் ஹாஸிமி, அப்துல்லா அலி செய்யத் அல் இப்ரி, முஹம்மத் அலி அல் இப்ரி, காலித் ஆகியோர் அழைத்து வரப்படுவதையும் மண்டபத்தை திரை நீக்கம் செய்து திறந்து வைப்பதையும், மண்டபத்தை ஜம்மிய்யதுல் ஹைரிய்யா அமைப்பின் தலைவர் அஷ்ஷய்க் முனீர் சாதிக் மற்றும் ஓமான் நாட்டு தாய் ஒருவர் சேர்ந்து நாடாவை வெட்டுவதையும் நினைவுச் சின்னம் வழங்குவதையும், மரம் நடுவதையும், பாடசாலை அதிபர் எம். ஜீ. நயீமுல்லா அதிதிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்குவதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment