பைஷல் இஸ்மாயில்-
அம்பாறை மாவட்ட பிரதேச செயலக மட்ட கழகங்களுக்கிடையிலான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் தெஹியத்தகண்டி பிரதேச செயலகப் பிரிவு சம்பியனாக தெரிவானது. அம்பாறை மாவட்ட பிரதேச செயலகப் பிரிவுகளின் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா நேற்று சனிக்கிழமை (02) அட்டாளைச்சேனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் விசேட அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் மற்றும் ஓய்வு பெற்ற உதவி மாகாணப் பணிப்பாளர் எம்.ஜெஸ்ரின் பெரோ, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எச்.விமலசேன, பிரதேச மட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கழகங்களுக்கிடையிலான மாவட்ட இவ்விளையாட்டுப் போட்டியில் 75 புள்ளிகளைப் பெற்று தெஹியத்தக்கண்டி பிரதேச சயலகக் கழகம் சம்பியனானதுடன், அட்டாளைச்சேனை பிரதேச செயலக கழகம் 37 புள்ளிகளைப் பெற்று 02ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
இதேவேளை ஆண்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் அட்டாளைச்சேனை பிரதேச செலயகத்திற்குட்பட்ட கழகம் சம்பியனானதுடன், 02ஆம் இடத்தை தெகியத்தகண்டியைச் சேர்ந்த கழகமும் பெற்றுக் கொண்டது. பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் தெகியத்தக்கண்டி பிரதேசக் கழகம் சம்பியனானது. 02ஆம் இடத்தில் உகன பிரதேசசெயலக கழகம் பெற்றுக் கொண்டது.
ஆண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் சிறந்த மெய்வல்லுனராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஜே.ஏ.நுஸ்ரி தெரிவானதுடன் பெண்களுக்கான சிறந்த மெய்வல்லனாராக தெகியத்தக்கண்டியைச்சேர்ந்த எம்.ஜி.நிர்மலா குலசூரிய தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பரிசில்ள் வழங்கி வைக்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment