பாலமுனை அல் ஈமானிய்யா அரபுக் கல்லூரி மற்றும் பாலமுனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் ஏற்பாட்டில் இடம்பெற்ற “பலஸ்தீனம் யூதர்களின் உரிமையா” “பலஸ்தீனத்தினத்தின் இன்றய நிலை” “முஸ்லிம் சமூகம் இஸ்லாத்தின் அடிப்படையில் இன்று வாழ்கின்றதா” “ இஸ்லாமிய இளைஞர்களின் இன்றய நிலை” எனும் தலைப்புக்களில் மாபெரும் விசேட இஸ்லாமிய தெளிவரை நிகழ்வு புதன்கிழமை(13) மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 11.00 மணி வரை பாலமுனை பொது நூலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விசேட பேச்சாளர்களாக அல் ஈமானிய்யா அரபுக்கல்லூரி அதிபர் அல் ஹாபிழ் மௌலவி ஏ.எல்.சாஜித் ஹ_ஸையின்(பாகவி),அல் ஈமாணிய்யா அரபுக் கல்லூரி விரிவுரையாளர் அல் ஹாபிழ் மொளலவி பீ.நிஸ்தார்(பாகவி) ஆகியோர் கலந்து கொண்டு விசேட தெளிவுரையாற்றினர்.இதில் பெருந்திரளான பொது மக்கள் மற்றும் மகணவர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment