இஸ்ரேலுக்கும், காஸாமுனை ஹமாஸ் போராளிகளுக்கும் இடையேயான 3 நாள் சண்டை நிறுத்தம் நேற்று முன்தினம் அமலுக்கு வந்த சில மணி நேரத்திலேயே தோல்வியில் முடிந்தது.
காஸாமுனையில் ரபா பகுதியில் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை தொடுத்தது. இடைவிடாது குண்டுமழை பொழிந்தது. இந்த தாக்குதலில் குறைந்தது 160 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இத்துடன் சேர்த்து இஸ்ரேல் தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,600 ஐ கடந்து விட்டது. இதில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் தான்.
ஹமாஸ் இயக்கத்தினர் 51 ராக்கெட்டுகளை வீசியதுடன், பீரங்கி தாக்குதலையும் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.
மேலும் தங்கள் தரப்பில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதுடன், ஒருவர் காஸாமுனையில் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் தொடுத்துவருவது சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.





















0 comments :
Post a Comment