பௌத்த மக்களையும் சிங்களவர்களது உரிமைகளையும் பாதுகாப்பதற்கு மேலுமொரு அமைப்பு உதயமாகிறது!

பௌத்த மதத்தையும் சிங்கள மக்களது உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் புதியதொரு அமைப்பு உருவாகவுள்ளது. சிங்கள ராவய என்ற அமைப்பே இதனை உருவாக்கவுள்ளது. 

முற்று, முழுதாக சிங்கள பௌத்த இளைஞர்களைக் கொண்டதாக இது அமையவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அமைப்பின் தலைவர் அக்கீமன தயாரத் தேரர், நாடு தழுவியதாக இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் முதல் கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள பௌத்த இளைஞர், யுவதிகள் இந்த அமைப்பில் இணைந்து கொள்வதற்கு தங்களது இணக்கத்தைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
 சிங்களத்தில் லங்கா சீ நியுஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :