பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அஜித் ரோஹண போல் நடித்தவர் கைது

' நான் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அஜித் ரோஹண பேசு­கின்றேன்' என அறி­முகம் செய்­து­கொண்டு தொலை­பே­சியில் மிரி­ஹான பொலி­ஸா­ருக்கு மோட்டார் சைக்­கி­ளொன்­றினை விடு­விக்க உத்­த­ர­விட்ட நபர் ஒரு­வரை கைதுசெய்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண தெரி­வித்தார். இரு தொலை பேசி இலக்­கங்­களைப் பயன்­ப­டுத்தி இந்த வேலையை சந்­தேக நபர் முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் அவரை நுகே­கொட நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­ததன் பின்னர் நாளைய தினம் வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

கடந்த சனிக்­கி­ழமை இரவு 9.30 மணி­ய­ளவில் மிரி­ஹான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில் விஷேட போக்கு வரத்து சோதனை நட­வ­டிக்கை ஒன்­றினை பொலிஸார் முன்­னெ­டுத்­துள்­ளனர். குடி போதை­யுடன் வாகனம் செலுத்­து­வோரை கைது செய்யவே இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இதன் போது கட­மை­யி­லி­ருந்த பொலிஸார் மோட்டார் சைக்­கி­ளொன்றை நிறுத்­து­மாறு சமிக்ஞை செய்­துள்­ளனர்.

பொலி­ஸாரின் சமிக்ஞ்­சையை பொருட்­ப­டுத்­தாது அந்த மோட்டார் சைக்­கி­ளா­னது பய­ணித்­துள்­ளது. அந்த மோட்டார் சைக்­கிளில் இருவர் பய­ணித்­துள்ள நிலையில் பொலிஸார் விரட்டிச் செல்­வதை உணர்ந்து அவ்­வி­ரு­வரும் மோட்டார் சைக்­கிளை இடை நடு­வி­லேயே விட்­டு­விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர். இந் நிலையில் விட்டுச் சென்ற மோட்டார் சைக்­கிளை மிரி­ஹான பொலிஸார் மீட்டு தடுத்து வைத்­துள்­ளனர்.

இந் நிலையில் நேற்று முன் தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­பகல் ஒரு மணிக்கும் 1.20 மணிக்கும் இடையே மிரி­ஹான பொலிஸ் நிலை­யத்தின் போக்­கு­வ­ரத்து பிரி­வுக்கு இரு தொலை பேசி அழைப்­புக்கள் கிடைத்­துள்­ளன. அந்த அழைப்பை ஏற்­ப­டுத்­திய நபர் ' நான் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அஜித் ரோஹண கதைக்­கின்றேன்' என தன்னை அறி­முகம் செய்­து­கொண்டு தடுத்து வைக்­கப்­பட்டுள்ள மோட்டார் சைக்­கிளின் இலக்­கத்தை குறிப்­பிட்டு விசா­ரித்­துள்ளார்.அத்­துடன் அதனை உட­ன­டி­யாக விடுவிக்கும் படியும் கட்­டளை இட்­டுள்ளார்.

குறித்த அழைப்பு தொடர்பில் சந்­தேகம் அடைந்­துள்ள மிரி­ஹான பொலிஸார் விசா­ரணை செய்து மோட்டார் சைக்­கிளின் உரி­மை­யா­ளரை கைது செய்­தனர்.தொடர்ந்து தொலை­பேசி எண்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு முன்­னெ­டுக்­கப்­பட்டவிசா­ர­ணை­களை தொடர்ந்து குறித்த நபரே தொலை­பேசி ஊடாக பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண போன்று கதைத்­துள்ளார் என்பது தெரி­ய­வந்­துள்­ளது. இதற்­காக அவ­ரது கைய­டக்கத் தொலை­பேசி இலக்கம் மற்றும் மோட்டார் சைக்­கிளில் தப்பிச் செல்லும் போது பின் இருக்­கையில் அமர்ந்­தி­ருந்தநபரின் தொலை­பேசி இலக்கம் ஆகி­ய­னவேபயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மை­யையும் பொலிஸார் கண்­ட­றிந்­துள்­ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :