ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் பயிலுநர் ஆசிரியர்களுக்கு இடையே மோதல்


ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் பயிலுநர் ஆசிரியர்கள் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பயிலுநர் ஆசிரியர்களுக்கு இடையிலான மோதலில் காயமடைந்த ஏழு பேர் கொட்டகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

கல்வியியற் கல்லூரியின் உணவகத்தில் நேற்றிரவு இரவு உணவு வேளையின்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பயிலுநர் ஆசிரியர் ஒருவரிடம் நேற்றிரவு வாக்குமூலம் பதிவுசெய்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :