ஐ.நாடு­களின் நிபுணர் குழுவின் அறிக்கயில் உள்ளவை நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யிலும் இடம்­பெற்­றுள்­ளன

க்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வைக்கு தான் சமர்ப்­பித்த அறிக்கை மற்றும் ஐக்­கிய நாடு­களின் நிபுணர் குழுவின் அறிக்கை ஆகி­ய­வற்றில் உள்ள விட­யங்­களே இலங்­கையின் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யிலும் இடம்­பெற்­றுள்­ளன என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை தெரி­வித்­துள்ளார்.

சர்­வ­தேச ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கி­யுள்ள செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அவர் அதில் மேலும் கூறி­யுள்­ள­தா­வது

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வைக்கு இலங்கை விவ­காரம் குறித்து சமர்ப்­பித்த அறிக்­கைக்­காக நான் முன்­நிற்­கின்றேன். மேலும் அது பிர­சா­ரத்­துக்­கா­னது என்று கூறப்­படும் கருத்­தையும் நிரா­க­ரிக்­கின்றேன். இலங்கை மீள­மைக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது. ஆனால் மேலும் முன்­னேற்­றத்தை நோக்கி பய­ணிக்­க­வேண்­டி­யுள்­ளது. குறிப்­பாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு செவி­ம­டுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இவை எமக்கு முன் வைக்­கப்­பட்ட விட­யங்­க­ளாகும். அவற்றை நாங்கள் மீண்டும் அவர்­களின் முன்னால் வைத்­துள்ளோம். இலங்கை அர­சாங்கம் கற்­ற­றிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை அர­சாங்கம் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வேண்டும் என்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வலி­யு­றுத்தி வந்­தது. எனினும் அதில் அர­சாங்கம் தோல்­வி­கண்­டுள்­ளது. அந்­த­வ­கையில் இலங்கை விட­யத்தில் சர்­வ­தேச அவ­தா­னமும் அழுத்­தமும் தேவைப்­ப­டு­கின்­றது.

நான் மனித உரிமைப் பேர­வைக்கு சமர்ப்­பித்த அறிக்கை மற்றும் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கை ஆகியவற்றில் உள்ள விடயங்களே இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை யிலும் இடம்பெற்றுள்ளன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :