இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜய­சூ­ரி­யவை கொலை செய்யும் நோக்கம் எது­வு­முள்­ளதா?

லங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜய­சூ­ரி­யவை கொலை செய்யும் நோக்கம் எது­வு­முள்­ளதா? என சபையில் நேற்று கேள்வி எழுப்­பிய எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சட்­டத்­த­ர­ணிகள் சங்கத் தலை­வரின் வாக­னத்தை பின்­தொ­டர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்­சக்­கர வண்­டியின் இலக்­கங்­களின் கூட்டுத் தொகை 13 என்றும் இவ்­வா­றான கூட்டுத் தொகை­யுடன் இலக்­கங்கள் வழங்­கப்­ப­டு­வ­தில்லை என்ற பிர­த­மரின் பதிலை ஏற்றுக் கொள்­ள­மு­டி­யா­தெ­னவும் சுட்­டிக்­காட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் கீழ் இரண்டில் விசேட கூற்­றொன்றை முன்­வைத்து உரை­யாற்றும் போதே எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார்.

எதிர்க்­கட்சித் தலைவர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

இலங்கை சட்டத் தர­ணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜய­சூ­ரிய கொழும்பு ஹல்ஸ்­ரொப்பில் தனது கட­மை­களை முடித்துக் கொண்டு வாக­னத்தில் திரும்பிக் கொண்­டி­ருக்­கையில் முகம் தெரி­யாத வண்ணம் ஹெல்­மட்­டினால் முகத்தை முழு­மை­யாக மூடி­வந்த சந்­தேக நபர்கள் மோட்டார் சைக்­கிளில் பின் தொடர்ந்து வந்­துள்­ளனர். இது தொடர்­பாக அவர் கறுவாத் தோட்ட பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

ஹல்ஸ்­ரொப்­பி­லி­ருந்து கல­தாரி ஹோட்டல் வரை இந்த மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்து வந்­துள்­ளது.

இப்­பி­ர­தே­சத்தில் ஜனா­தி­பதி செய­லகம் காணப்­ப­டு­கி­றது. அத்­தோடு இப்­பி­ர­தேசம் அதி­யுயர் பாது­காப்பு வல­ய­மாகும். இவ்­வா­றா­னதோர் நிலை­யிலும் உபுல் ஜய­சூ­ரிய கல­தாரி ஹோட்­டலில் 1 1/2 மணித்­தி­யா­லங்கள் இருந்து விட்டு வெளியே வந்த பின்­னரும் அந்த மோட்டார் சைக்கிள் ஹோட்­ட­லுக்கு வெளியே காணப்­பட்­டுள்­ளது.

பின்னர் உபுல் ஜய­சூ­ரிய கொழும்பு 7 இல் உள்ள அர்னஸ்ட் த சில்வா மாவத்­தையில் உள்ள காரி­யா­ல­யத்­திற்கு சென்­றுள்ளார். அதன் போதும் இந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்­கிள்கள் அவரை துரத்தி சென்று அப்­பி­ர­தே­சத்தில் இரண்டு மூன்று மணித்­தி­யா­லங்கள் வரையில் நின்­றுள்­ளனர்.இந்த மோட்டார் சைக்­கிளில் இருந்த நபர்கள் இங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த முச்­சக்­க­ர­வண்­டியில் இருந்த சில­ரோடு உரை­யாடிக் கொண்­டி­ருந்­துள்­ளனர். மோட்டார் சைக்கிள் இலக்கம் டபிள்யூ.பி.யூ.பி. 4072ஆகும்.முச்­சக்­கர வண்­டியின் இலக்கம் 207௸ - 5314 ஆகும். அத்­தோடு இந்த மோட்டார் சைக்கிள் நபர்கள் கடந்த 15 மற்றும் 17 ஆம் தினங்­க­ளிலும் உபுல் ஜய­சூ­ரி­யவின் வீட்டை நோட்­ட­மிட்­டுள்­ளனர்.

இது தொடர்­பாக தலங்­கம பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால் இது­வ­ரையில் இச்­சம்­பவம் தொடர்பில் சந்­தேக நபர்கள் எவரும் கைது செய்­யப்­ப­டவும் இல்லை. அவர்­க­ளது வாக­னங்கள் தொடர்­பான தக­வல்­களை பெற்றுக் கொள்­ளவும் பொலிஸார் தவ­றி­யுள்­ளனர்.

மோட்டார் வாகனத் திணைக்­க­ளத்தில் இந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்­சக்­கர வண்டி தொடர்பில் இலக்­கங்­களின் தர­வுகள் இல்லை. ஆனால் இதில் ஆச்­ச­ரி­யப்­பட வேண்­டிய விடயம் என்­ன­வெனில் இந்த வாக­னங்­களின் இலக்­கங்­களின் தர­வுகள் அங்கு இல்­லா­த­போதும் அவ்­வி­லக்­கங்­க­ளுக்கு முன்­ன­ரா­னதும் பின்­ன­ரா­ன­து­மான இலக்­கங்­களின் தர­வுகள் மோட்டார் வாகனத் திணைக்­க­ளத்தில் காணப்­ப­டு­கின்­றன.

எனவே, இந்த இலக்­கங்­க­ளுக்கு இடை­யே­யான இடை­வெளி தொடர்பில் எது­வி­த­மான தெளி­வு­ப­டுத்­தலும் வழங்­கப்­ப­ட­வில்லை.அத்­தோடு இவ்­வி­டயம் தொடர்­பாக சட்­டமா அதிபர் நேர­டி­யாக பொலிஸ் மா அதி­ப­ருக்கு எழுத்து மூலம் அறி­வித்­துள்ளார்.இச்­சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களின் தற்­போ­தைய நிலை என்ன? வாகன இலக்­கங்­க­ளி­டையே இவ்­வா­றா­ன­தொரு இடை­வெளி ஏற்­ப­டு­வ­தற்­கான காரணம் என்ன? அத்­தோடு இவ்­வா­க­னங்­களின் இலக்­கங்கள் தொடர்­பான பிர­தமர் வழங்­கிய பதிலை ஏற்ற முடி­யாது.

அதா­வது மோட்டார் வாகன போக்­கு­வ­ரத்து திணைக்­களம் வாக­னங்­களின் இலக்க கூட்டுத் தொகை­யாக 13 இலக்கம் வரும் வரை­யி­லான இலக்­கங்­களை வழங்­கு­வதை இரத்து செய்­துள்­ள­தாக தெரி­வித்தார்.

ஆனால், மேற்­கண்ட வாக­னங்­களின் இலக்­கங்­களை கூட்­டினால் அது 13 ஆக வர­வில்லை. எனவே, இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதன் போது குறுக்கிட்ட சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் வழங்கிய தகவல்களையே பிரதமர் சபையில் வழங்கினார். எனவே, இது தொடர்பில் உண்மைத் தன்மையை மீள்பரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :