பிறை தொடர்பான தவறான செய்திகளைப் பரப்பாமல் பிறைக்குழுவின் தீர்மானத்தை உறுதியாக எடுத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்செய்க் ரிஸ்வி முப்தி நாட்டு முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஷவ்வால் தலைப்பிறை குறித்து உத்தியோகபுர்வமான முடிவுகளை அறிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு மணித்தியாலங்களாக நாட்டின் தலை சிறந்த உலமாக்கள் ஒன்று கூடி எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானமாக இது உள்ளது. இதனை அனைவரும் ஏற்று நாளையுடன் நோன்பை முப்பதாக முழுமைப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
சில மாதங்களாக நாட்டில் இருந்த பதற்றத்தை அல்லாஹ்வின் அருளால் இந்த ரமழானில் அவன் இல்லாமல் செய்தான். இந்த நிலைமை நாட்டில் தொடர்வதற்கு நாம் அனைவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் எனவும் அஷ்செய்க் ரிஸ்வி முப்தி மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment