வாழைச்சேனையில் வீடமைப்புக் கடன் வேலைத் திட்டத்தின் கீழ் 9 இலட்சம் ரூபாய் கடன் வசதி


த.நவோஜ்-

வெளிநாட்டு வீரர்கள் (ரட்ட விருவோ) வீடமைப்புக் கடன் வேலைத் திட்டத்தின் கீழ் வெளிநாடு செல்லும் நிலையான வீடற்று தொழில் புரிவோருக்காக வீடொன்றினை அமைப்பதற்கான கடன் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சகலருக்கும் வீடு எனும் தொனிப் பொருளின் கீழ் அரசு மேற்கொள்ளும் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கு ஒரு சக்தியினை வழங்கும் நோக்கத்துடன் இலங்கை சமுர்த்தி அதிகார சபையும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் ஒன்றிணைந்து இதனை செயற்படுத்தி வருகின்றது.

இதன் கீழ் வீடொன்றினை நிர்மாணிக்கும் பொருட்டு வழங்கக் கூடிய உயர்ந்த பட்ச கடன் தொகையான மூன்று இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. இதற்கான வருடாந்த வட்டி வீதமாக பத்து வீதமும் அறிவிடப்படுகின்றது.

இதற்கமைய வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் மூன்று பேருக்கு வீடமைப்பதற்காக தலா மூன்று இலட்சம் ரூபாய் வீதம் ஒன்பது இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.தட்சணாகௌரி தினேஸ், வாழைச்சேனை சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் திருமதி.தேவமனோகரி பாஸ்கரன், வாழைச்சேனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.கோ.லதா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :