அம்பாறை மாவட்ட 24 ஆவது இரானுவ படைப்பிரிவினால் நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி





பைஷல் இஸ்மாயில்-

கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் வழி காட்டலின் கீழ் அம்பாறை மாவட்ட 24 ஆவது இராணுவ படைப்பிரிவினால் நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை காலை வட்ட விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை தன்வசமாக்கிக் கொண்டதுடன் பாடசாலை மட்டத்தில் கல்முனை ஸாஹிறாக் கல்லூரி சம்பியனானது.

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு இனநல்லுறவை ஏற்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை (29) அட்டாளைச்சேனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இச்சுற்றுப் போட்டியில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா பிரதம அதிதியாகவும், அதிதிகளாக பிரிகேடியர் எச்.கே.பி. பீரிஸ், பிரிகேடியர் வன்னயாராச்சி மற்றும் தென்கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் எஸ்எம்.எம்.இஸ்மாயில், பதிவாளர் எம்.எச்.அப்துல் சத்தார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாடசாலை மட்டங்களுக்கிடையில் இடம்பெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு கல்முனை ஸாகிறா கல்லூரியும், திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மஹாவித்தியாலயமும் தெரிவானது.

அணிக்கு 11 பேர் 10 ஓவர்களைக் கொண்ட இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயம் நிர்னயிக்கப்பட்ட ஓவர்கள் முடிவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 42 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்டிபடுத்தாடிய கல்முனை ஸாகிறாக் கல்லூரி எந்தவித விக்கெட்டும் இழப்பின்றி 6 ஓவர்களில் குறித்த இலக்கை மிக இலகுவாகப் பெற்று சம்பியனானது.

கழகங்களுக்கிடையில் அணிக்கு 11 கொண்ட 12 ஓவர்கள் கொண்டமைந்த இச்சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு அட்டாளைச்சேனை காலை வட்ட அணியும், பொத்துவில் கோல்ட் ஸ்டார் அணியும் தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை காலை வட்ட அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் முடிவில் 02 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பொத்துவில் கோல்ட் ஸ்டார் அணியினர் 12 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :