பொதுத்தேர்தலில் கட்சியை வெற்றிப்பாதைக்கிட்டு செல்லும் நோக்குடன் 15 எம்.பி.க்கள் அடங்கிய குழுவொன்றை ஐக்கிய தேசிய கட்சி நியமித்துள்ளது இது தொடர்பாக சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அக்கட்சியின் ஊடக பேச்சாளர் கயந்த கருணாதிலக்க கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
எதிர்வரும் காலங்களில் ஊவா மாகாண சபை தேர்தல் மற்றும் பொது தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்திய கூறுகள் தென்படுகின்றன.
இதற்கமைய கிராம மட்டத்தில் கட்சியினை வெற்றி பாதைக்கு இட்டுச்செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கமைய தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு கட்சி சார்பாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச ஒருங்கிணைப்பு கிளைகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தகைய நடவடிக்கைகளை கண்காணித்து கட்சியை வெற்றிப்பாதைக்கிட்டு செல்லும் நோக்குடன் 15 எம்.பி.க்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினால் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்படி கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும். இதேவேளை ஊவா மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு பலமான வேட்பாளர்களை எமது கட்சி களமிறக்கவுள்ளதுடன்
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு கிடைத்தவுடன் எமது ஜனாதிபதி வேட்பாளரின் பெயரையும் வெளியிடுவோம் என்றார்.
0 comments :
Post a Comment