57.7 மில்லியன் அழுக்கு நாணயத் தாள்கள் அழிப்பு

தூய நாணயத்தாள் கொள்கைக்கு அமைய 67.7 பில்லியன் ரூபா முகப்பெறுமதியுள்ள 157.7 மில்லியன் அழுக்குற்ற நாணயத் தாள்களை மத்திய வங்கி அழித்தது என மத்திய வங்கி அறிக்கை கூறுகின்றது.

மத்திய வங்கியின் நாணயப் பகுதி, நாணயத் தாள்களை பிரித்து எடுப்பதற்காக அறிவுறுத்தல்களை கொண்ட ஓர் சுற்றறிக்கையை வெளியிட்டது. இதைவிட ஊடகங்கள் வழியாக நாணயத்தாள்களை பேணுவது பற்றி விழிப்புணர்வு திட்டங்கள் நடத்தப்பட்டன.

நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களினதும் பாரம்பரிய அடையாளங்களை சித்திரிக்கும் 10 ரூபா பெறுமதியான நாணயங்களை தொடராக வெளியிட மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இப்படியான ஒவ்வொரு நாணயத்திலும் ஒருபக்கத்தில் ஒரு மாவட்டத்தின் பாரம்பரிய அடையாளத்துடன் தொடர்பான குறியீடுகள் இருக்கும்.

நாணயத்குற்றிகளை வெளியிடுவது செலவு கூடியது. பெருமளவிலான நாணயக்குற்றிகள் வழிபாட்டுத் தளங்களின் உண்டியல்களின் முடங்கியுள்ளன என மத்திய வங்கி தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :