SLMC செயற்படும் விதம் பிரச்சினையாகவே அமைகிறது - இது முஸம்மிலின் கண்டுபிடிப்பு


சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலையை தோற்றுவித்து வடக்கு கிழக்கை இணைப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட தயாராக இருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அண்மையில் அறிவித்திருந்தது.

வட மாகாண சபையில் 38 உறுப்பினர்களுள் மேலதிக 2 ஆசனங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 30 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 5 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், ஈ.பி.டி. பி கட்சிக்கு 2 ஆசனங்கள் கைவசம் உள்ளன.

இதனிடையே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு ஆசனமே கிடைத்தது.

இருந்தபோதும், அந்த கட்சி சமகாலத்தில் செயற்பட்டு வரும் விதம் பிரச்சினைக்கு உரியது என்று தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முசம்மில் தெரிவித்தார்.

கருத்து தெரிவித்த அவர், சிங்கள மக்களுடன் முறுகல் நிலை உள்ளதாக தெரிவித்து பிரிவினைவாதிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு அந்த கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் முயற்சிப்பதாக தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :