ஓட்டமாவடியில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பூங்கா திறந்து வைப்பு - படங்கள்

த.நவோஜ்-

ட்டமாவடி பிரதேச சபையினால் அமீர் அலி விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பூங்கா வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் ஆர்.தர்மலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் மற்றும் பிரதேச சபையின் ஆளும் தரப்பு, எதிர்தரப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

புறநெகும திட்டத்தில் பதினெட்டு லட்சம் ரூபா நிதி அளிப்பில் அமைக்கப்பட்டுள்ள இச்சிறுவர் பூங்கா வாரத்தின் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமை, மற்றும் விடுமுறை தினங்களில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :