கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் அதிபர் கணபதிப்பிள்ளை தலைமையில் நிகழ்வு



த.நவோஜ்-

னங்களுக்கிடையில் நல்லுறவை வளர்க்கும் நோக்கில் தென்பகுதியில் இருந்து வருகை தந்த பமுனுகம ரொட்டரி கழக உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு ஒரு தொகை பொருட்களை அன்பளிப்பு செய்தனர்.

மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ரீ.கணபதிப்பிள்ளை தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரத்ன, பமுனுகம ரொட்டரிக் கழக தலைவர் நெல்சன் ரொட்ரிகோ, டபிள்யூ.குமார் பெரேரா, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன மற்றும் பமுனுகம ரொட்டரிக் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மல்டி மீடியா, புரஜெக்டர், சங்கீத வாத்தியக் கருவிகள், முதலுதவிப் பொருட்கள், புத்தகங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன், மாங்கேணி கிராமத்தில் வறிய குடும்பத்தை சேர்ந்த முப்பது குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :