கோரகல்லிமடு கிராமத்தில் இரு கோயில் உண்டியல்களை உடத்து பணம் களவாடப்பட்டுள்ளது - படங்கள்



த.நவோஜ்-

ட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோரகல்லிமடு கிராமத்தில் இரு கோயில் உண்டியல்கள் புதன்கிழமை இரவு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.

பாடசாலை வீதியிலுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் ஏரிக்கரை வீதியிலுள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலயம் என்பவற்றின் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்த இரண்டு கோவில்களிலும் கடந்த இரண்டு வருடங்களில் மூன்றாவது முறையாக உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆலய நிருவாகத்தினரால் வியாழக்கிழமை ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸால் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :