இஸ்லாத்தை பின்பற்றுவோரை தாக்கப்பட்ட வடரக விஜித தேரரின் தலைமையில் அழைப்பு



அஷ்ரப் ஏ. சமத்-
ஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் அனைத்து சகோதரர்களையும் 2014.03.24 திங்கற்கிழமை காலை 9 மணிக்கு வரலாற்றுத் தீர்மானம் எடுப்பதற்கு பொதுபலசேனாவினால் தாக்கப்பட்ட வடரக விஜித தேரரின் தலைமையில் முஸ்லீம்களை அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்படி விடயமாக நேற்று வெள்ளிகிகிழமை ராஜகிரியவையில் ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் அறிவித்தல் நோட்டிஸ் வழங்கப்பட்டது.

நோட்டிசில்,

முஸ்லீம், மக்களை இலக்காகக் கொண்டு பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் தொடர்ந்து முஸ்லீம் மக்களை துன்புறுத்தி வருகின்றனர். அண்மைக் காலமாக அவர்களது தீவிர நடவடிக்கைகள் எந்த வகையிலும் உசிதமானதல்ல. சட்டரீதியற்ற பொலீசார் தாம் எனக் கூறிக் கொண்டு தாய் நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமன்றி, சமயங்களைக் கூட தாக்கி மீண்டும் தாய் நாட்டை இரத்தக் களமாக்க முயற்சிக்கின்றனர்.

நமக்காக என்றும் குரல் கொடுக்கின்ற சமாதானத்தை நேசிக்கின்ற அதற்காக உழகைகின்ற வடரக விஜித தேரரின் தலைமையில் சகல சமயத் தலைவர்களையும் உள்ளடக்கி 2014.03.24 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு சகல சமயத்தலைவர்களையும் உள்ளடக்கிய வரலாற்றுத் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளனா.

அத்தினம் வெள்ளை உடையுடன் காலி முகத்திடலுக்கு சமுகமளிக்கும்படி வேண்டுகின்றேன்.

இப்படிக்கு
சுகல சமய இனங்களுக்கிடையே சமாதானத்திற்காக பிராத்திப்போர் என அந் நோட்டிசில் சிங்கள தமிழ் முலம் சகல கொழும்பில் உள்ள ஜும்ஆப் பள்ளிவசாலில் முன் விநியோகிகப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :