கிண்ணியா நகரசபையின் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமான கலந்துரையாடல் -படங்கள்





ரைஸ்-கிண்ணியா நகரசபை முன்னெடுத்துவரும் புறநெகும அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமான கலந்துரையாடல் நேற்று நகரசபை கேட்போர் கூடத்தில் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் கிண்ணியா நகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் புறநெகும அபிவிருத்தி திட்டங்களில் ஒப்பந்தகாரர்களாக வேலைகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்தக்காரர்கள் கலந்து கொண்டதோடு அவர்களின் தற்போதைய வேலைகளின் நிலைமைகளை ஆராயும் விதமாக அமைந்தது.
 
இதன் போது நகரசபை முன்னெடுத்துவரும் புறநெகும அபிவிருத்தி சம்பந்தமாக மக்கள் முன்வைத்த முறைப்பாடுகள் சம்பந்தமாகவும், ஒப்பந்தக்காரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் புறநெகும அபிவிருத்தி திட்டங்களின் பின்னடைவுகள் அவற்றினை எவ்வாறு அதிகரிக்கும் அளவுக்கு கொண்டு செல்வது போன்ற விடயங்கள் சம்பந்தமாகவும் பேசப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது நகரசபை நகபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், நகரசபை உறுப்பினர் பாஜில் குத்தூஸ், பொறியியலாளர் வி.ராஜகோபாலன், நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத், மற்றும் புறநெகும திட்ட பிரிவின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :